நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரயில், பேருந்துச் செயல்பாட்டு நேரம் நீட்டிப்பு

சிங்கப்பூர்:

தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் இரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.

எஸ்பிஎஸ் டிரான்சிட், குறிப்பிட்ட சில சேவைகளை நீட்டிக்கவிருப்பதே அதற்குக் காரணம்.

ஏப்ரல் 30ஆம் தேதியன்று, டௌன்டவுன், வடக்கு-கிழக்குப் பாதையில் இரயில் சேவைகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்தது.

டௌன்டவுன் பாதையில், எக்ஸ்போ நிலையத்தை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் புக்கிட் பாஞ்சாங் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.03 மணிக்குப் புறப்படும். 

மற்றொரு திசையிலுள்ள கடைசி இரயில் நள்ளிரவு 12.04 மணிக்குப் புறப்படும்.

வடக்கு-கிழக்குப் பாதையில், பொங்கோலை நோக்கிச் செல்லும் கடைசி ரயில் ஹார்பர்ஃபிரண்ட் நிலையத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படும். 

மற்றொரு திசையில் உள்ள கடைசி இரயில் நள்ளிரவு 12.02 மணிக்குப் புறப்படும்.

செங்காங்-பொங்கோல் இலகு இரயில் சேவை, வடக்கு-கிழக்குப் பாதையின் கடைசி இரயில்கள் நகர நிலையங்களைச் சென்றடையும்வரை நீட்டிக்கப்படும்.

ரயில் செயல்பாட்டு நேரங்களோடு ஒத்துப்போக, எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் பின்வரும் சேவைகளுக்கான கடைசிப் பேருந்துப் புறப்பாட்டு நேரங்களும் நீட்டிக்கப்படும்.

60A, 63M, 114A, 181, 222, 225G, 228, 229, 232, 238, 240, 241, 243G, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812, 974A ஆகியவையே அவை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset