நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மியன்மார் ராணுவம் மீது தாக்குலில் நால்வர் மரணம்

யங்கூன்: 

மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களை எதிர்த்து பல அமைப்புகள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தற்காப்புப் படை எனும் போராளி அமைப்பு, மியன்மார் நேரப்படி ஏப்ரல் 14-ஆம் தேதி மாலை பியின் ஓ லுவின் நகரை நோக்கி 11 ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

இதன் காரணமாக அந்நகரில் உள்ள மருத்துவமனை, பௌத்த துறவு மாடம், ஹோட்டல் ஆகியவை சேதமடைந்தன.

தாக்குதலில் நான்கு பேர் மாண்ட நிலையில் 12 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்களும் அடங்குவர்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset