நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து: ஒருவர் கைது

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே ஆடவர் ஒருவரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அவர் தேவாலயத்தில் இருந்து குறிப்பிடப்படாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

4 ஆடவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுவதாக அவசரச் சேவைப் பிரிவு AFP செய்தி நிறுவனத்திடம் கூறியது.

சம்பவ இடத்துக்கு 11 மருத்துவ வாகனங்கள் விரைந்தன.

கத்திக்குத்துச் சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

அதில் தேவாலயத்தின் பிஷப் பிரார்த்தனையை வழிநடத்திக் கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

ஆதாரம்ஹெரால்ட் சன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset