நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது மனிதாபிமானமற்றது: ஜியோர்ஜியோ மெலோனி

ரோம்:

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும்  முறை மனிதாபிமானமற்றது என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி தெரிவித்துள்ளார்.

வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என்றும் இது சர்வதேச குற்றமாக ஏற்றுக் கொள்ளப்படும் வரை தாம் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவதாகவும் தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

முன்னதாக, இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத் தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாடகைத் தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்குத் தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 1 மில்லியன் யூரோ அபரதாமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset