நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு  சிங்கப்பூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

சிங்கப்பூர்:

ஈரானுக்குச் செல்வதை ஒத்திவைக்குமாறு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்த அறிக்கையை  வெளியுறவு அமைச்சு வெளியிட்டது.

ஈரானுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்‌ரேல் சூளுரைத்துள்ளது.

ஈரானுடன் சிங்கப்பூருக்கு அரசதந்திர உறவு இல்லை. அங்கு சிங்கப்பூர் தூதரகம் இல்லாததால் அவசரநிலை ஏற்பட்டால் உதவி வழங்குவது சவால்மிக்கதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

ஈரானுக்குச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டால் வெளியுறவு அமைச்சுடன் பதிவு செய்து கொள்ளும்படி சிங்கப்பூர் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset