நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகம் ஒற்றுமையாக வலுப்பெற வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

இந்திய சமூகம் ஒற்றுமையாக வலுப்பெற வேண்டும் என்று தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கூறினார்.

இன்று புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். 

இந்துக்கள் கொண்டாடும் குரோதி சித்திரைப் புத்தாண்டு, சீக்கியர்கள் கொண்டாடும் வைசாக்கி, மலையாளி வம்சாவளியினர் கொண்டாடும் விஷு புத்தாண்டு ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

இந்த புத்தாண்டு அனைவருக்கும் வெற்றியையும் முன்னேற்றத்தையும் கொடுக்க வேண்டும்.

இந்தியர்கள் பல்வேறு மொழிகளையும், பண்டிகைகளையும், பண்பாடுகளையும் கடைப்பிடித்து வந்தாலும், நமக்குள் நாம் இந்தியர் எனும் உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும்.

இது தான் நமக்கு வெற்றியைத் தரும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset