செய்திகள் இந்தியா
பதஞ்சலி மன்னிப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்ட கோரி யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் நிபந்தனையற்ற மன்னிப்பு ஏற்க உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இந்த விவகாரத்தில் இந்திய மருத்துவ தயாரிப்புகளுக்கு உரிமம் அளிக்கும் மாநில ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து நீதிமன்றம் ஆட்சேபம் தெரிவித்தது.
பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. நவீன மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களை தங்களுடைய ஆயுர்வேத தயாரிப்புகள் குணப்படுத்தும் என அந்த நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கில் பதஞ்சலி நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.
இதைப் பொருப்படுத்தாமல் சர்ச்சைக்குரிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து யோகா குரு ராம்தேவ், அந்த நிறுவனத்தின் தலைவர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்.
இந்த மன்னிப்பு வெறும் வாய்வழி வார்த்தை என்று கூறி நீதிமன்றம் நிராகரித்தது.
இருவரும் மீண்டும் மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்தனர்.
அவற்றை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோர், நீதிமன்ற உத்தரவுகளை அவர்கள் பின்பற்றவில்லை.
வழக்குரைஞர் நீதிமன்றத்தில் உறுதியளித்த மறுதினம் அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மாநில உரிமம் ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்துள்ளது.
இது குறித்து ஆணையத்தின் அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2025, 11:31 am
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
November 13, 2025, 9:09 pm
வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
