நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

61 வயது மாது மரணம்!  57 வயது கணவன் கைது

கூலிம்: 

கணவரால் துன்புறுத்தப்பட்ட வயோதிய மாது பரிதாபமாக உயிரிழந்தாக நம்பப்படுகின்றது.

61 வயதான அந்த மாது கூலிம் மருத்துவமனையில் இரவு 7.50 மணியளவில் இறந்தது குறித்து தங்களுக்குப் புகார் கிடைத்ததாக கூலிம் மாவட்டப் போலீஸ் துறை தலைவர் சுப்ரிடெண்டன் முஹம்மத் அஸிசூல் முஹம்மத் கைரி தெரிவித்தார்.

இதனிடையே பாதிக்கப்பட்டவர், முதல் நாள் இரவு சுமார் 9 மணியளவில் பத்து பூத்தேவிலுள்ள அவரது இல்லத்திலிருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

குளியலறையில் விழுந்ததால் அந்த மாது காயம் அடைந்தாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பரிசோதனையில் முடிவில் பாதிக்கப்பட்டவருக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தது.

அதோடு முகம் உட்பட உடல் முழுமையும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக முஹம்மத் அஸிசூல் ஓர் அறிக்கையின் வாயிலாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்த மரண விசாரணைக்கு உதவும் பொருட்டு மரணமடைந்த பெண்ணின் கணவரான 57 வயதான நபரைப் போலீஸ் கைது செய்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.

உடற்கூறு அறிக்கையின் அடைப்படையில் மரணமடைந்த பெண்ணில் உடலில்  பழைய மற்றும் புதிய காயங்கள் இருப்பதால் குடும்ப வன்முறையின் விளைவாக அவர் இறந்திருக்கக்கூடுமென போலீஸ் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஏப்ரல்-15 ஆம் நாள் அவரை அந்த நபர் தடுத்து வைக்கப்படுகின்றார்.  

குற்றவியல் சட்டம் 302ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை தொடர்கின்றது.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset