நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹமாஸ் தலைவரை தொடர்பு கொண்ட பிரதமர் அன்வார், இரங்கலை தெரிவித்துக் கொண்டார்

புத்ராஜெயா:

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை தொடர்புக் கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர்.

நான்கு பேரக்குழந்தைகள் உட்பட இஸ்மாயிலின் மூன்று பிள்ளைகளான ஹஸேம், அமீர், முகமது ஆகியோரின் இழப்பு தொடர்பான சோகமான செய்தி கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் ஹமாஸ் இயக்கத்தின்  தலைவரை தொடர்பு கொண்ட போது தனது இரங்கலை தெரிவித்ததாக பிரதமர் கூறினார்.

இஸ்மாயிலின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து பாலஸ்தீனியர்களுடனும் பிளவுபடாத ஒற்றுமையையும் ஆதரவையும் மலேசியா வெளிப்படுத்தும்.

மலேசியர்களின் சார்பில் இதனை  நான் தெரிவித்தேன் என பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset