நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய ஆடவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்: ஐஜிபி 

கோலாலம்பூர்: 

6 துப்பாக்கிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவர் மீது நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

அவ்வாடவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்று தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி இவ்வாரம் அந்த ஆடவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவதாக எதிர்ப்பார்க்கப்படுவதாக ரஸாருடின் கூறியிருந்தார். 

இந்த வழக்கு குறித்துக் காவல்துறை டர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் விசாரணைக்கு உதவும் வகையிலுள்ள மற்ற தகவல்களையும் கரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்த ஆடவரின் ண்மையான நோக்கம் குறித்துத் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset