நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

5 லட்சம் ரிங்கிட் பெட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்: போலீஸ்

ஷாஆலம்:

ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த பயணப் பெட்டியின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

கடந்த மாதம் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடியில் 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான பணம் இருந்த பயணப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

இந்த பயணப் பெட்டியின் உரிமையாளரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

பேரங்காடியின் சுற்றுப்புற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹுசைன் கூறினார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பெட்டியை கொண்டு வந்த உரிமையாளரையோ அல்லது நபரையோ போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் பிற தரப்பினரிடமிருந்து சில ஆதாரங்கள் உள்ளன. பெட்டியில்   இருந்து ஏழு கைரேகைகளையும் பெறப்பட்டுள்ளது.

ஆகையால் போலீசார் இந்த விசாரனை தொடர்கின்றனர். 

சம்பந்தப்பட்ட நபரிடமும் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஹுசைன் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset