செய்திகள் மலேசியா
மஇகா இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டி: துணைத் தலைவருக்கு கேசவன் போட்டி
கோலாலம்பூர்:
மஇகா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் பதவிக்கு அர்விந்த் கிருஷ்ணன் போட்டியிடுவதாக அறிவித்தார்.
அதே வேளையில் துணைத் தலைவர் பதவிக்கு கேசவன் கந்தசாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மஇகா கட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இதனால் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அறிவிப்புகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மஇகாவின் இளைஞர் பிரிவின் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவதாக அர்விந்த் கிருஷ்ணன் அறிவித்தார்.
2024 முதல் 2027 தவனைக்கான தேர்தலில் நான் களத்தில் இறங்குகிறேன்.
அதே வேளையில் மஇகா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் பதவிக்கு கேசவன் கந்தசாமி போட்டியிடுகிறார்.
நாங்கள் இருவரும் ஒரே அணியில் இருந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளோம்.
கட்சி தேர்தலில் போட்டி எல்லாம் சகஜம். ஆனால் இந்த தேர்தலால் இளைஞர் பிரிவில் பிளவு இருக்கக் கூடாது என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm
21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
May 6, 2024, 11:00 am