செய்திகள் மலேசியா
வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
ஈப்போ:
வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று WCE EXPRESSWAY நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் நிலையில் இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அதிகரிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மேலும், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தங்கள் தரப்பு பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
ஏப்ரல் 17ஆம் தேதி வரை எந்தவொரு சாலை பழுது பார்க்கும் பணிகள், சாலைகளை மூடும் நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று WCE நிறுவனம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm