நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்த தாய்லாந்து விமானம்

கொழும்பு:

4 வருடங்களுக்குப் பிறகு தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகள் தினமும் இடம்பெறும் எனவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset