நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ பட்டம் கொண்ட வர்த்தக பிரமுகர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்

புத்ராஜெயா:

டான்ஶ்ரீ பட்டம் கொண்ட வர்த்தக பிரமுகர் மீது நாளை குற்றம் சாட்டப்படவுள்ளது.

அரசு வாகனங்களை சப்ளை செய்யும், நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் கொள்முதல் ஒப்பந்த வழக்கு தொடர்பாக அவர் மீது நாளை வழக்குத் தொடரப்படவுள்ளது.

இதற்கான அனுமதியை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திடம் இருந்து எம்ஏசிசி பெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட தொழிலதிபர் மீது நாளை காலை 8.30 மணிக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என தெரிகிறது.

4.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசு வாகனங்கள் கொள்முதல், நிர்வாகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்காக டான்ஸ்ரீ என்ற பட்டம் கொண்ட தொழிலதிபரின் வீட்டில் எம்ஏசிசி சோதனை நடத்தியதாக ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset