செய்திகள் மலேசியா
என்னை 3 முறை வெற்றி பெற செய்தவர்கள் பூச்சோங் மக்கள்: கோபிந்த் சிங்
புத்ரா ஜெயா:
பூச்சோங் நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்ட போது அமோக வெற்றி பெற்றேன்.
பின்னர் 2013,2019 இல் நடைபெற்ற தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்றேன்.
பூச்சோங் நாடாளுமன்ற தொகுதி மக்கள் எனக்கு வழங்கிய ஆதரவை ஒரு போதும் மறக்க மாட்டேன்.
இப்போது டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் பூச்சோங்கை மறக்க முடியாது என்று அவர் சொன்னார்.
அதனால் தான் பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகம் என்னை அழைத்ததும் கோவில் மண்டப கட்டட நிதி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்று அவர் சொன்னார்.
பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் எனக்கு மிகவும் பிடித்தமான கோவில்.
ஒவ்வொரு முறையும் இந்த கோவிலுக்கு வந்த பிறகு தான் வேட்புமனுவை தாக்கல் செய்தேன்.
அந்த வகையில் கோவில் தலைவர் டத்தோ புத்ரி சிவம், கட்டடக் குழு தலைவர் பாஸ்கரன், இந்நிகழ்ச்சியில் இயக்குநர் டத்தோ டி. மோகன் ஆகியோர் இந்த மாநாட்டு மண்டபத்தை கட்டி முடிக்க பெரும் முயற்சியை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
மேலும் இம்மாநாட்டு மண்டப கட்டட நிதிக்கு ஒரு லட்சம் ரிங்கிட்டை வழங்குவதாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார்.
இதனிடையே பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மாநாட்டு மண்டப கட்டட நிதிக்கு 50,000 ரிங்கிட்டை வழங்குவதாக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm