நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்ரோல் குண்டு தாக்குதலில் சமரசம் இல்லை: பிரதமர்

கோத்தா செமரான்:

கேகே மார்ட் மீதான பெட்ரோல் குண்டு தாக்குதல் விவகாரத்தில் எந்தவொரு சமரசமும் காணப்படாது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை உறுதியாக தெரிவித்தார்.

குவாந்தானில் உள்ள கேகே மார்ட் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடந்துள்ளது.

இதற்கு முன் பேரா பீடோரிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது.

அல்லாஹ் காலுறை விவகாரத்தில் சட்ட ரீதியில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆகவே அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று போலீசாருக்கு  நான் அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராக, குறிப்பாக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இது அமைதியான நாடு. நாட்டில் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இன அல்லது மத பிரச்சினைகளை பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset