நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டாமன்சாராவில் தீ விபத்து: கணவன் - மனைவி மரணம்

பெட்டாலிங்ஜெயா:

டாமன்சாராவில் உள்ள வீடொன்றில் நடந்த தீ விபத்தில் கணவன், மனைவி மரணமடைந்தனர்.

அதே வேளையில் 14 வயது மகள் உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை டாமன்சாரா உத்தாமாவில் நிகழ்ந்தது.

வீட்டின் சமையல் அறை, முதன்மை படுக்கையறையில் இந்தீ விபத்து குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கிடைந்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இருந்தாலும் இந்த விபத்தில் 55 வயதுடைய லியோங் சேன் முன் அவரின் கணவர் 61 வயதுடைய காங் தி யாம் ஆகியோர் மரணமடைந்தனர்.

அதே வேளையில் அவர்களின் 14 வயது மகள் உயிர் தப்பினார்.

இந்த சம்பத்தில் வீடு 70 சதவீதம் எரிந்து விட்டது என்று சிலாங்கூர் தீயணைப்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset