நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

சென்னை: 

அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை நிராகரிக்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   

தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், கடந்த ஆண்டு செப்.7-ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சநாதனத்துக்கான அா்த்தத்தை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருப்பதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஒளிந்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்தை வெளியிட்டிருந்தாா். 

அவதூறு கருத்தை வெளியிட்டதாக உதயநிதிக்கு எதிராக  ரூ.1 கோடியே 10 லட்சம் மான நஷ்ட ஈடு கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடா்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக்கோரி அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் நிராகரிப்பு மனு தாக்கல் செய்தாா்.  

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு  வந்தபோது, எடப்பாடி பழனிசாமி சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னைப்பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியதை ஒப்புக்கொண்டிருக்கிறாா்; எனவே, அவா் பேசியது அவதூறு கருத்தா, இல்லையா என்பது விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என்பதால் உதயநிதிக்கு எதிரான வழக்கை நிராகரிக்கக் கூடாது என கோரப்பட்டிருந்தது.  

இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப். 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset