நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிப்பர்: சைஃபுடின் நம்பிக்கை

பெட்டாலிங் ஜெயா: 

மத்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் சட்டத்திருத்ததிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீமின் வெளிப்படையான எதிர்ப்பைத் தொடர்ந்து, கைவிடப்பட்ட குழந்தைகளுக்குச் சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கும் சட்டங்களைத் திருத்துவதற்கு அரசாங்கத்திற்கு எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து ஆட்சேபனைகளைத் தெரிவித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு விளக்கம் அளிப்பீர்களா என்று கேட்டபோது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து விளக்கமளிக்க தாம் தயாராக இருப்பதாகவும் சைஃபுடின் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset