செய்திகள் இந்தியா
பாகிஸ்தான் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவித்தது தவறில்லை: உச்சநீதிமன்றம்
புது டெல்லி:
அரசின் முடிவுகளை விமர்சிக்க இந்தியர்களுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பேராசிரியர் ஜாவீத் அகமது தனது வாட்ஸ்அப்பில், ஆகஸ்ட் 5ம் தேதி கருப்புத் தினம் என்றும் ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திரதின வாழ்த்துகள் என்றும் பதிவிட்டிருந்தார்.
அவர் மீது வகுப்புவாத வேறுபாட்டை தூண்டுதல் பிரிவின் கீழ் மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கு எதிராக அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தயப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்க நீதிபதிகள், அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1)ஏ வின் கீழ் பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது.
அதன்படி, அரசின் அனைத்து முடிவுகளையும் விமர்சிக்க உரிமை உள்ளது. பிற நாடுகளின் சுதந்திர தினத்துக்கு வாழ்த்து தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இதில் எந்த தவறும் இல்லை.
அரசின் முடிவுகளுக்கு அதிருப்தி தெரிவிக்கும் ஒவ்வொருவரின் மீது வழக்குப் பதிவு செய்தால் ஜனநாயகம் தழைக்காது என்று கூறி அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm