நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட்டின் வீழ்ச்சியை மூலதனமாக்குங்கள்; சுற்றுலாவில் கவனம் செலுத்துங்கள்: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்: 

ரிங்கிட் வீழ்ச்சிக்கு மத்தியில் சுற்றுலாத் துறையில் அதிக கவனம் செலுத்துமாறு முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்  வலியுறுத்தினார்.

சுற்றுலா சேவைகள் சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

மேலும் நிதி நெருக்கடியின் போது வெறுமனே ஒரு மீட்பராக மட்டுமே செயல்படக்கூடாது.

இதில் சம்பந்தப்பட்ட துறையின் நிலைத்தன்மையில் குறிப்பாக கவனம் செலுத்தும் உத்திகள் தேவை என்று பெரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

கடந்த 1998  ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு தேசிய சுற்றுலா இயக்கத்தை மேற்கோள் காட்டினார்.

இது பல்வேறு அரசாங்க முன்முயற்சிகள் மூலம் இந்தத் துறையை விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset