நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கைப்பேசியைக் கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை 

விழுப்புரம்: 

கைப்பேசியைக் கணவர் உடைத்ததால் 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை செய்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்துள்ளது. 

தற்கொலை செய்துக்கொண்ட பெண்ணான பென்னரசி அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் சிலரிடம் கைப்பேசியில் பேசியுள்ளார்.  

இதனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அவரது கணவரான கோபிநாத் அவரது கைப்பேசியை உடைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

குடும்ப பிரச்சனை காரணமாக பென்னரசி இரண்டு குழந்தைகளையும் தனித்தனி துப்பட்டாவால் தூக்கிட்டு கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் அனுமானித்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset