நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை: ஈடன் ஹசார்ட்

பிரஸ்ஸல்ஸ்:

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர் யார் என்பது குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார் பெல்ஜியம் நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் ஈடன் ஹசார்ட். 

அது மெஸ்ஸியும் இல்லை, ரொனால்டோவும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கால்பந்து உலகின் ஜாம்பவான்களின் பட்டியலில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், போர்சத்துக்கலின் ரொனால்டோவும் நிச்சயம் இருப்பார்கள். 

இவர்கள் இருவரில் யார் தலைசிறந்தவர் (என்ற ஒப்பீடுகள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இருந்து கொண்டே இருக்கும். 

அது அவர்கள் தேசிய அணிக்காக விளையாடினாலும், கிளப் அணிக்காக விளையாடினாலும் நீடிக்கும். அவ்வப்போது இருவரது கையும் ஒருவருக்கு ஒருவர் ஓங்கி நிற்கும்.

இந்த சூழலில் இது குறித்து தனது கருத்தை ஈடன் ஹசார்ட் தெரிவித்துள்ளார். 

அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ, இருவரில் யார் தலைசிறந்த வீரர்? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

என்னைப் பொறுத்தவரை மெஸ்ஸி தான். கால்பந்து குறித்து பேசினால் அவரது பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும். இதில் சிலருக்கு மாற்று கருத்து இருக்கலாம். 

ரொனால்டோ சிறந்த கோல் மன்னன். அதோடு அணிக்கு கிண்ணங்களை வென்று கொடுக்கும் தலைசிறந்த வீரரும் கூட. 

ஆனால், இவர்களை விட என்னைப் பொறுத்தவரையில் ஜினாடின் ஜிடான் தான் தலைசிறந்த வீரர் என அவர் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset