நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பஞ்சாப்பை 28 ரன்களில் வென்றது  சென்னை சூப்பர் கிங்ஸ்: ஜடேஜா அபாரம்

தரம்சாலா: 

நடப்பு ஐபிஎல் சீசனின் 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. 

இதில் 28 ரன்களில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜடேஜா.

தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. 

ஜடேஜா 43 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் 32 ரன்கள், டேரில் மிட்செல் 30 ரன்கள் எடுத்தார்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டியது.

இறுதியில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி தோல்வி கண்டது.

இதன் மூலம் 28 ரன்களில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset