செய்திகள் இந்தியா
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை: முதல்வர் நிதீஷ் குமார்
பாட்னா:
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்தது.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத்தின் மகனுமான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக அந்த ஆட்சியில் பதவி வகித்தார். நிதீஷ் குமார் முதல்வராக இருந்தார்.
"நான் முதல்வராக இருந்தபோதிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் செய்த முறைகேடுகள் தற்போதுதான் தெரியவந்தது' என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.
தேஜஸ்வி யாதவும், அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் எடுத்து முக்கிய முடிவுகளை, தற்போது பாஜக கூட்டணியுடன் அமைந்துள்ள பிகார் அரசு மறுஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிதீஷ் குமார், "கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். விசாரணை நடைபெற்று வருகிறது' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am