செய்திகள் மலேசியா
புதிய பூமிபுத்ரா வளர்ச்சி திட்டத்தில் அனைவரின் நலனும் கண்டறியப்பட வேண்டும்: பிரதமர்
புத்ரா ஜெயா:
புதிய பூமிபுத்ரா வளர்ச்சி திட்டத்தில் அனைவரின் நலனும் அடையாளம் காணப்பட வேண்டும்.
குறிப்பாக இதன் பலன்களை சில குழுக்கள் மட்டும் அனுபவிக்க முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பூமிபுத்ராக்களை அனைத்து ரீதியிலும் வலுப்படுத்த மடானி அரசு உறுதியாக உள்ளது.
ஆகையால் பூமிபுத்ரா மக்களின் கட்டமைப்பில் புதிய முன்னேற்ற அணுகுமுறைக்கான உந்து சக்தியாக பூமிபுத்ரா பொருளாதார மாநாடு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாடு பூமிபுத்ராக்களின் நலனுக்காக மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டத்தை நாம் தவிர்க்க வேண்டும்.
இதில் புதிய பூமிபுத்ரா வளர்ச்சிப் பகுதிகள் அடையாளம் காணப்பட வேண்டும்.
அத்துடன் முறையான தரவு சேகரிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று 2024 ஆம் ஆண்டிற்கான முதல் பூமிபுத்ரா பொருளாதார வாரியக் கூட்டத்திற்கு பின் பிரதமர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm