நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன்ஸ்பெக்டர் பணிக்கு 35,000 மேற்பட்டோர் விண்ணப்பம்: புக்கிட் அமான் தகவல் 

பெட்டாலிங் ஜெயா:

இந்த ஆண்டுக்கான 340 இன்ஸ்பெக்டர் பணி காலியிடத்திற்கு 35,000-க்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று புக்கிட் அமானின் நிர்வாகத் துறை இயக்குநர் அஸ்மி அபு காசிம் தெரிவித்தார். 

இன்ஸ்பெக்டர் பணிக்கான அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பது அப்பணியில் ஈடுப்பட ஆர்வமாக அதிகமானோர் இருக்கின்றனர் என்பதை காட்டுவதாகவும் அவர் கூறினார். 

இதனால் இப்பணிக்கான நேர்முகத் தேர்வுகள் கடினமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தரநிலைகள் உடல் பரிசோதனைகள், சைக்கோமெட்ரிக் மதிப்பீடுகள், நேருக்கு நேர் நேர்காணல்கள் உட்பட சோதனையின் அனைத்து அம்சங்களுக்கும் மிகவும் கடுமையாகப்படுவதன் மூலம் திறனான நபரை அப்பணியில் அமர்த்தலாம் என்றும் அவர் கூறினார். 

நேர்காணல்கள் கடந்த மாதம் நாடு முழுவதும் தொடங்கிய நிலையில் முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத் தொடர்ந்து சார்ஜென்ட், கான்ஸ்டபிள்களுக்கான தேர்வு நடைபெறும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset