செய்திகள் தமிழ் தொடர்புகள்
மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும்: எம்.எச். ஜவாஹிருல்லா
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. எனவே, காந்தியடிகள் கனவு கண்ட இந்தியாவை மீண்டும் அமைக்க பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வரும் மக்களவை தேர்தலில் தோற்கடிக்கப்படுவதற்கு அனைத்து வகையிலும், அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக பாடுபடுவது என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும்
மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியை கட்டாயம் திமுக எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது. இதுதொடர்பாக திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கு போட்டியிட்டாலும், அதில் வெற்றி வாய்ப்பு உள்ளது.
தமிழ் பேசத் தெரியாத வட இந்தியர்கள்:
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கிகள், தபால் நிலையங்கள், ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் போன்ற அரசுத் துறை சார்ந்த நிறுவனங்களில் தமிழ் பேசத் தெரியாத வட இந்தியர்கள் பணியில் அமர்த்துவது அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை நியமிக்க வேண்டும் என இப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

உபா சட்ட திருத்தங்கள்:
உபா சட்டம் அட்டவணை 4ல் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தின்படி எந்த ஒரு நபரையும், நிறுவனத்தையும் இந்தியப் புலனாய்வுத் துறை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதியாகச் சித்தரிக்க முடியும். தனி நபரை ஒரு நீதிமன்றத்தின் தண்டனைக்கு முன்பாகவே பயங்கரவாதி என அழைக்க முடியாது. ஆனால், இந்த சட்டத் திருத்தம் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற அடிப்படை சட்ட விதியைத் தகர்க்கிறது. ஆகவே, உபா சட்ட திருத்தங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என இப் பொதுக்குழு கோருகின்றது
என்.ஐ.ஏ. அமைப்பு கலைக்கப்பட வேண்டும்:
2019 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தேசியப் புலனாய்வு அமைப்பின் திருத்தப்பட்ட சட்டம் மூலமாக அசுர பலம் பெற்றிருக்கும் தேசியப் புலனாய்வு முகமை என்னும் என்.ஐ.ஏ. அமைப்பு
எந்த ஒரு மாநில அரசின் அனுமதியைப் பெறாமல் மாநில காவல்துறையின் அதிகாரத்தை மீறி சாதாரண வழக்குகளையும் விசாரிக்க முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்திற்குப் பங்கம் விளைவிக்கும் என்.ஐ.ஏ. கலைக்கப்பட வேண்டுமென இப்பொதுக்குழு கோருகின்றது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
