நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சின்சினாட்டி ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதி சுற்றில் சிவசங்கரி

கோலால்லம்பூர்:

சின்சினாட்டி ஸ்குவாஷ் போட்டியில் காலிறுதி சுற்றுக்கு தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி முன்னேறியுள்ளார்.

சின்சினாட்டி பொது ஸ்குவாஷ் போட்டி  அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இதன் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சிவசங்கரி, மலேசியாவின் மற்றொரு வீராங்கனை ரேசல் அர்னால்டை எதிர்த்து களமிறங்கினார்.

42 நிமிடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிவசங்கரி 10-12, 13-11, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

சிவசங்கரி அடுத்ததாக மூன்றாவது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஒலிவியா வீவரை எதிர்கொள்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset