நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட தர முடியாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா:

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிகூட தர முடியாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மம்தா பேசுகையில், மேற்கு வங்க சட்டப் பேரவையில் காங்கிரஸுக்கு ஒரு எம்எல்ஏகூட இல்லை.

எனினும், இந்தியா கூட்டணியில் உள்ளதால் அவர்களுக்கு இரு மக்களவைத் தொகுதியை ஒதுக்குவதாக கூறினேன். அதுவும் மால்டா மாவட்டத்திலேயே காங்கிரஸுக்கு தருவதாக கூறினேன்.

ஆனால், அவர்கள் மேலும் அதிக தொகுதிகளை எதிர்பார்த்தனர். காங்கிரஸுடன் மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியைக்கூட பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset