செய்திகள் இந்தியா
கேரளத்தில் 15, PFI அமைப்பினருக்கு தூக்கு தண்டனை
ஆலப்புழா:
கேரளத்தில் பாஜக மாநில நிர்வாகி ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு கேரள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.ஜி.ஸ்ரீதேவி இந்தத் தீர்ப்பை வழங்கினார்.
பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வழக்குரைஞர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன், ஆலப்புழாவில் 2021 கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்திய சமூக ஜனநாயக கட்சியை (எஸ்டிபிஐ) சேர்ந்தவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மொத்தம் 15 பேருக்கு எதிராக விசாரணை நடைபெற்று வந்தது.
அதில், கொலையில் நேரடியாக ஈடுபட்டதாக 8 பேர் மீதும், கொலைக்கு உதவியதாக 4 பேர் மீதும், சதித் திட்டம் தீட்டியதாக 3 பேர் மீதும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm