நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் தலைவிதியைப் பற்றிதான் எனக்குக் கவலை : டைய்ம் கவலை

கோலாலம்பூர்:

முன்னாள் நிதியமைச்சர் டைய்ம் ஜைனுடின் தன் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

இந்நிலையில், தாம் தமது சொத்துடைமைகளை முறையாக அறிவிக்க தவறியதாகக் கூறியது தொடர்பில் அவர் பிரதமர் அன்வார் இப்ராஹிமைக் கடுமையாக சாடியுள்ளார்.

மலேசியா தற்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் மற்றும் போலி வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கத்தின் கீழ் உள்ளது என்றும் அவர் கூறினார். 

நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகக் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் தற்போது  நேர்மாறாக உள்ளது என்றும் அவர் சாடினார்.

மேலும், தற்போது தன் தலைவிதியைப் பற்றி தனக்குக் கவலையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் தம் மீது அனைத்துப் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைக்கட்டும். அது குறித்துத் தமக்குக் கவலை இல்லை என்றார் அவர். 

தனது நாட்டின் தலைவிதியைப் பற்றி தான் தற்போது தாம் கவலைப்படுவதாக கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset