செய்திகள் மலேசியா
சையத் ஹுசேன் நியமனம்; பிரதமர் அன்வாரின் செயல் பாராட்டுக்குரியதாகும்
கோலாலம்பூர்:
பெர்சத்து கட்சியைச் சேர்ந்த புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் அபு ஹுசேன் உணவு விலை, வாழ்க்கை செலவீன தொடர்பான சிறப்பு செயற்குழுவிற்குத் தலைமையேற்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் நியமித்துள்ளார்.
பிரதமர் அன்வாரின் இந்த செயல் பாராட்டுக்குரியதாகும் என்று அம்னோ கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி கூறினார்.
யாரை நியமிக்க வேண்டும், நியமிக்கக்கூடாது என்பது பிரதமரின் கையில் தான் உள்ளது. சையத் அபு ஹுசேன் பிரதமர் அன்வாருக்கு ஆதரவு அளிக்கிறார்.
மேலும், ஒற்றுமை அரசாங்கம் மேற்கொண்ட அமைச்சரவை மாற்றங்களையும் அம்னோ வரவேற்பதாக புவாட் சர்காஷி மேலும் சொன்னார்.
எதிர்கட்சி தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறப்பு செயற்குழுவில் இணைந்து பணியாற்றுவது என்பது ஆரோக்கியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm