நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுல்தான் இப்ராஹிமை வழியனுப்ப 30,000 ஜொகூர் மக்கள் திரள்வார்கள்

ஜொகூர்பாரு:

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிமை வழியனுப்ப 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் திரள்வார்கள்.

ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம். குமார் இதனை தெரிவித்தார்.

நாட்டின் 17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பொறுப்பேற்கவுள்ளார்.

மாட்சிமை தங்கிய மாமன்னராக பொறுப்பேற்பதற்காக அவர் ஜொகூரில் இருந்து கோலாலம்பூருக்கு வரவுள்ளார்.

இதனால் ஜனவரி 31ஆம் தேதி புக்கிட் செரேனே அரண்மனையில் இருந்து செனாய் விமான தளத்திற்கு அவர் செல்லவுள்ளார்.

அப்போது சுல்தான் இப்ராஹிமை வழியனுப்பும் நோக்கில் 30 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் அச்சாலையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அன்றை தினம் காலை 7.45 மணி முதல் 35.5 கிலோ மீட்டர் கொண்ட சாலைகள் மூடப்படவுள்ளது. இந்த அரச பயணம் ஒரு மணி நேரமாகும்.

இந்நேரத்தில் போலீஸ்படையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

அதே வேளையில் மக்கள் தங்களின் பயணங்களை திட்டமிட வேண்டும் என்று குமார் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset