நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசியா- தென்கொரியா இடையிலான காற்பந்தாட்டம் சிறந்தவையாக அமைந்துள்ளது: ஏ. எஃப் சி புகழாரம் 

கோலாலம்பூர்: 

2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண காற்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. ஈ குழு நிலையிலான ஆட்டத்தில் மலேசியா தென்கொரியா இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. 

இந்த ஆட்டமானது ஆசிய கிண்ண போட்டியின் நடப்பில் தலைசிறந்த ஆட்டமாக கருதப்படுவதாக ஆசிய காற்பந்து சம்மேளனம் புகழாரம் சூட்டியுள்ளது. 

விறுவிறுப்பும் அதிரடிகளும் நிறைந்த ஆட்டமாக மலேசியா- தென்கொரியா ஆட்டம் விளங்கியதாக ஏ.எஃப்.சி குறிப்பிட்டது 

மலேசியா ஈ குழுவின் கடைசி நிலையில் இடம்பெற்றாலும் முன்னணி காற்பந்து குழுவான தென்கொரியாவை அது சமநிலைப்படுத்தியுள்ளது. 

மலேசியாவின் அபார ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset