நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மீண்டும் பாஜகவுக்கு சென்ற ஷெட்டர்

புது டெல்லி:

கர்நாடக பேரவை தேர்தலின்போது பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் மீண்டும் இணைந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது, பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படாததையடுத்து, அதிருப்தி அடைந்த லிங்காயத் சமூகத் தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய அவர், தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அவரை மாநில சட்ட மேலவை உறுப்பினராக நியமித்தது.

இந்நிலையில், காங்கிரஸிலிருந்து விலகிய அவர், தில்லியில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் மீண்டும் இணைந்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset