நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்பூல் நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகுகிறார் ஜர்கன் குளோப்

லிவர்பூல்:

லிவர்பூல் அணி நிர்வாகி ஜர்கன் குளோப், இந்தப் பருவம் நிறைவடைந்த பிறகு பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த அதிர்ச்சித் தகவலை நேற்று லிவர்பூல் வெளியிட்டது. 

பருவம் முடிந்த பிறகு தான் பதவி விலக விரும்புவதாக 56 வயது குளோப் தங்களிடம் தெரியப்படுத்தினார் என்று அக் குழுவின் உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிளோப் லிவர்பூல் நிர்வாகியாகப் பதவியேற்றார். 

அவரின் தலைமையில் அக் குழு, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ணம், இங்கிலாந்து பிரிமியர் லீக் விருது, எப்ஏ கிண்ணம், லீக் கிண்ணம், கிளப் உலகக் கிண்ணம் ஆகியவற்றைக் கைப்பற்றியது.

கிளோப்புக்குக்கீழ் 2019-20 பருவத்தில் லிவர்பூல் பிரிமியர் லீக் விருதை வென்றது. 

30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் வாகை சூடியது லிவர்பூல்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset