நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விஜயகாந்த், வைஜெயந்தி மாலா , சிரஞ்சீவிக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

புது டெல்லி: 

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, பழம் பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மி நடனக் கலைஞர் எம்.பத்ரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை இந்திய அரசு அறிவித்தது.  

பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டன.

தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், சர்வதேச மல்லர்கம்பம் பயிற்சியாளர் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே ஆகியோர் உள்பட 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset