நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டி: மலேசியா சமநிலை

டோஹா:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மலேசிய அணியினர் சமநிலை கண்டனர்.

 அல் ஜானோப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் தென் கொரியா அணியை சந்தித்து விளையாடினர்.

பலம் வாய்ந்த தென் கொரியா அணியை பெரும் சவாலுடன் மலேசிய அணியினர் எதிர்கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மலேசிய அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியுடன் சமநிலை கண்டனர்.

இந்த ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் மலேசிய அணி ஏற்கெனவே இரு தோல்விகளை சந்தித்து உள்ளது.

இதனால் மலேசிய அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் பஹ்ரைன் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜோர்டான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தாய்லாந்து அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் சவூதி அரேபியா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset