நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் செல்சி

லண்டன்:

கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் இறுதி ஆட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் மிடல்ஸ்புரோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 6-1 என்ற கோல் கணக்கில் மிடல்ஸ்புரோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணிக்காக கோலே பால்மர் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை என்சோ பெர்னாணடஸ், அக்செல் டிசாசி, நோனி மாடுகே ஆகியோர் அடித்தனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செல்சி அணியினர் கரபாவ் கிண்ண இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

இறுதி ஆட்டத்தில் செல்சி, லிவர்பூல் அணிகள் நேருக்கு நேர் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset