செய்திகள் மலேசியா
கிள்ளானில் குண்டர் கும்பல், போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை: 133 பேர் கைது
கோலாலம்பூர்:
கிள்ளான் வட்டாரத்தில் குண்டர் கும்பல், போதைப் பொருளுக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன் மூலம் 133 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ்படையின் துணை இயக்குநர் ஃபாடில் மார்கஸ் கூறினார்.
கிள்ளான் வட்டாரத்தில் குண்டர் கும்பல், போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்கும் நோக்கில் போலீசார் சோதனைகளை நடத்தினர்.
கடந்த ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய இந்த சோதனை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த சோதனையின் வாயிலாக 133 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 120 பேர் உள்நாட்டவர்கள்.
கைதான அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm