நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கிய இந்திய விமானம்: உள்ளே இருந்த பயணிகள் கதி என்ன?

காபூல்:

மாஸ்கோ நோக்கிச் சென்ற  இந்திய விமானம் ஆப்கானிஸ்தான் அருகே விபத்துக்குள்ளானது

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அல்லது விமானத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருந்த இந்திய விமானம் ஆப்கானிஸ்தானின் ஜிபாக் மாவட்டம் அருகே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தானின் நாட்டில் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமான போக்குவரத்து பாதுகாப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

அங்கே பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு அம்சங்கள் இருப்பதே இதற்குக் காரணமாகும்.

இருப்பினும், அதையும் தாண்டி அவ்வப்போது விமான விபத்துகள் ஏற்படுகிறது. 

அப்படியொரு மோசமான விபத்து இந்திய விமானத்திற்கு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் ஆப்கானிஸ்தான் நாட்டில் விபத்தில் சிக்கியதாக முதல் கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பதக்‌ஷான் மாநிலத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பதக்‌ஷான் மாநிலத்தில் சிபக் மாவட்டத்தில் உள்ள மலையில் மோதி விமானம் விபத்திற்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

அதேநேரம் இந்த விமானம் எந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது, விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆதாரம்: News Room Post

தொடர்புடைய செய்திகள்

+ - reset