நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத்தில் படகு கவிழ்ந்து 12 மாணவர்கள் பலி

வதோதரா:

குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஏரியில்  படகு கவிழ்ந்து 12 பள்ளி மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்தனர்.

வதோதராவில் உள்ள ஹர்ணி ஏரிக்கு 4 ஆசிரியர்கள் தலைமையில் 24 பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை சுற்றுலா வந்தனர். மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே படகில் பயணித்து ஏரியை சுற்றிப் பார்த்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்தவர்கள் ஏரியில் விழுந்து தத்தளித்த மாணவர்களை காப்பாற்றினர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மாணவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். 12 மாணவர்கள், 2 ஆசிரியர்களின் உடல்கள் இதுவரை ஏரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோர்பி பாலம் விழுந்து 100க் கண்காகானோர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset