நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் 17 பேர் பார்வை இழப்பு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

அகமதாபாத்:

குஜராத்தில் கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பின் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்ட விவகாரத்தை மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலர், அகமதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அகமதாபாத் மாவட்டத்தின் மண்டல் பகுதியில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் செயல்படும் ராமானந்த் கண் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி 29 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்குப் பின் 17 பேருக்கு பார்வையிழப்பு ஏற்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset