நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

10 மணி நேரம் தாமதம்: விமானியை தாக்கிய பயணி

புது டெல்லி:

தில்லி விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதில் சுமார் 10 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த பயணி விமானியைத் தாக்கிய பயணி கைது செய்யப்பட்டார்.

மேலும், பயணிகள் விமான ஓடுபாதையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு கோவா புறப்படவேண்டிய இண்டிகோ விமானம் பனி மூட்டம் காரணமாக  சுமார் 10 மணி நேரம் தாமதமாக மாலை 5.35 மணிக்கு புறப்பட்டது.

மதியம் 12 மணிக்கு விமானத்துக்குள் சென்ற பயணிகளிடம் அறிவிப்பை துணை விமானி அனுப் குமார் அறிவித்தார்.

இதனால் கோபமடைந்த பயணி சாஹில் கட்டாரியா துணை விமானி அனுப் குமாரைத் தாக்கினார். இந்தச் சம்பவத்தையடுத்து, கட்டாரியாவைப் பாதுகாப்புப் படையினர் விமானத்திலிருந்து வெளியேற்றி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

தாக்குதல் நடத்திய பயணியை விமானத்தில் பறப்பதற்குத் தடைவிதிக்கும் பட்டியலில் சேர்ப்பது குறித்தும் ஆராயப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset