நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஙே கூ ஹாம் வீட்டில் தீ விபத்து; விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் பூர்த்தியாகும் 

கோலாலம்பூர்: 

பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கைகள் ஒரு வாரத்தில் பூர்த்தியாகும் என்று பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் இயக்குநர் சயானி சாய்டோன் கூறினார். 

இந்நிலையில், MOLOTOV COCKTAIL வகையிலான பொருள் ஒன்றும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் கிடைத்துள்ளது. இதனால் அதுதொடர்பான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார். 

தீ சம்பவத்தில் கிடைத்த இரு பொருட்களையும் பரிசோதனைக்காக கோலாலம்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று சயானி தெரிவித்தார். 

முன்னதாக, கடந்த வாரம் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஙே கூ ஹாம் வீட்டில் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். இந்த தீ விபத்தில் அவரின் வீட்டிலிருந்த மூன்று கார்களும் சேதமடைந்தன. 

இந்த தீ விபத்தின் பின்னணியில் தேசிய கூட்டணி இருப்பதாக ஙே கூ ஹாம் பகிரங்கமாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset