
செய்திகள் மலேசியா
பத்துமலை ஐயப்பன் ஆலய தேவஸ்தான முயற்சியில் 40 மாணவர்களுக்கு பள்ளி சீருடை
பத்துமலை:
பாலா இல்லம் சமூக நல இல்லத்தில் தங்கியிருக்கும் 40 இந்திய மாணவர்கள் பள்ளி சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகளை வாங்க பத்துமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் நேற்று 8,016 ரிங்கிட்டை வழங்கி பேருதவி புரிந்தது.
தைப் பொங்கலை முன்னிட்டு ஐயப்பன் கோவில் திருத்தலத்தில் நேற்று மகரஜோதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இலக்கயவில் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் சுவாமி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த விழாவில் சிறப்பு அங்கமாக பாலா இல்லம் சமூக இல்லத்தை சேர்ந்த 40 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
பாலா இல்லம் சமூக நல இயக்கத்தின் பொறுப்பாளர்களிடம் 8,016 ரிங்கிட் காசோலையை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் யுவராஜா ஆகியோர் நேரடியாக ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-பார்த்திபன் நாக்ராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 6:54 pm
தேசியத் தலைவர்களை மிரட்டும் வீடியோ தொடர்பாக 3 பேர் கைது: டத்தோ குமார்
September 12, 2025, 6:52 pm
அனைத்துலக நிலையிலான புறப்பாட பயிற்சி முகாமில் இந்தோனேஷிய, தாய்லாந்து பங்கேற்பு
September 12, 2025, 6:50 pm
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களுக்கான வாடகையை முழுமையாக மேம்பாட்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது: அமைச்சர்
September 12, 2025, 6:49 pm
திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஷாரா கைரினாவை படிவம் 4 மாணவர் அழைத்து, கேள்வி எழுப்பினார்: விசாரணை சாட்சி
September 12, 2025, 2:17 pm
தேசிய முன்னணியின் சில கட்சிகள் தேசியக் கூட்டணியில் சேர விண்ணப்பித்துள்ளன: துவான் இப்ராஹிம்
September 12, 2025, 2:15 pm
வெளியேற்றத்தை ஒத்திவைத்து முதலில் விவாதிக்க வேண்டும்: கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் கோரிக்கை
September 12, 2025, 2:14 pm
பிரதமர் வேட்பாளர்களை கேள்வி கேட்பது மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதற்கான அறிகுறியாகும்: பாஸ்
September 12, 2025, 2:11 pm
போராட்டத்தை தேசிய முன்னணி தொடர வேண்டும்: பிளவுபடக்கூடாது என நஜிப் வலியுறுத்துகிறார்
September 12, 2025, 2:10 pm