நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மணிப்பூரில் 2-ஆம் கட்ட நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல்

இம்பால்:

இந்திய ஒற்றுமை நீதிப் பயணம் எனும் 2-ஆம் கட்ட நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கினார்.

தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முதல்கட்டமாக கடந்த ஆண்டு மேற்கொண்டார் மேற்கொண்டார்.

தற்போது இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து ராகுல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.

பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் பேசுகையில், மணிப்பூரில் வன்முறை சம்பவங்களால் லட்சக்கணக்கானோருக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஆறுதல் கூற பிரதமர் மோடி நேரில் வரவில்லை.

மணிப்பூர் மக்களின் வலி, அவர்களின் வலி அல்ல. ஆனால் மணிப்பூர் மக்களின் வலி, வேதனை, துயரம் காங்கிரஸுக்கு புரிந்துள்ளது. மணிப்பூரில் அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் மீண்டும் ஏற்படுத்தும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset