செய்திகள் மலேசியா
ஆட்சியை கவிழ்க்க அரண்மனைக்கு கையூட்டா; போலீஸ் விசாரிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
ஆட்சியை கவிழ்க்க அரண்மனைக்கு கையூட்டு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் துரித விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கூறினார்.
ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க லங்கா துபாய் திட்டம் மேற்கோள்ளப்பட்டது என கூறப்பட்டது.
இப்போது ஆட்சியை கவிழ்க்க அரண்மனைக்கே கையூட்டு வழங்க தேசியக் கூட்டணி முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் போலீஸ் செய்துள்ளார்.
அதே வேளையில் இந்த குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. இதுவொரு அரசியல் சூழ்ச்சி என தேசியக் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறியுள்ளார்.
ஆகவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மைகள் வெளிவர வேண்டும்.
அதற்கு புகார்களின் அடிப்படையில் போலீசார் துரித விசாரணைகளை மேற்கோள்ள வேண்டும்.
அதே வேளையில் இதுபோன்ற பொய் தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm
21 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது
May 6, 2024, 11:00 am